இஸ்ரேல்-சிரியா எல்லையில் உள்ள ஹோலன் குன்று என்ற பகுதியில் 3 வயது சிறுவன் ஒருவர் பிறந்துள்ளார். இந்த குழந்தையின் தலையில் நீண்ட சிவப்பு நிற அடையாளம் ஒன்றை இருந்துள்ளது. அங்கு வாழும் ட்ரூஸ் இன குழுவினரை பொருத்தவரை பிறக்கும் குழந்தையின் உடலில் ஏதேனும் அடையாளம் இருந்தால் அந்த குழந்தை மறுபிறவி எடுத்துள்ளதாக நம்பப்படுகிறது. அந்த வகையில் இந்த குழந்தையும் மறுபிறவி எடுத்து இருக்கலாம் என்று குடும்பத்தினர் நினைத்தனர். இதற்கிடையே அந்த குழந்தை வளர்ந்து வந்தது. 3 வயது கடந்த நிலையில், அந்த குழந்தை நன்றாக பேச தொடங்கினார். அதன் பிறகு அச்சிறுவன் தனது மறுபிறவி குறித்து கூற தொடங்கினார்.

அதாவது சிறுவன் தனது பெற்றோரிடம், தான் கோடரியால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் அவரது உடலை புதைத்த இடத்தை குறித்து கூறினார். ஆனால் அவர்கள் இதை குழந்தை மனதின் கற்பனை என நினைத்தனர். குழந்தைகள் பலரும் புதிய கதைகளை உருவாக்கி கூறும் பழக்கம் கொண்டிருப்பதால், இதையும் அதேவகையாகவே பெற்றோர்கள் எடுத்துக்கொண்டனர். ஆனால், சிறுவன் தொடர்ந்து அதே விஷயங்களை கூறிக் கொண்டிருந்ததால், ஒரு நாள் அவர்களை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர் கூறியது போலவே, ஒரு பழைய எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல், சிறுவன் மேலும் சில அடி தள்ளிச் சென்று, “இங்கே தான் கொலை ஆயுதம் இருக்கிறது” என்று சுட்டிக்காட்டினார். அந்த இடத்தில் தோண்டியபோது, மண்ணுக்குள் ஒரு பழைய கோடரி கிடைத்தது. இது குழந்தை கூறிய விபரங்களுக்கு முழுமையாக பொருந்தியதால், கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுவன் ஏற்கனவே கூறியபடி, அவனை கொன்ற நபர் இன்னும் அந்த கிராமத்திலேவே வாழ்ந்து வருவதாகவும், அவரே தன்னை கொன்ற குற்றவாளி என்றும் கூறினார். குற்றவாளி ஆரம்பத்தில் தன் மீது குற்றத்தை மறுத்தாலும், சிறுவன் கூறிய எல்லா விவரங்களும், துல்லியமான ஆதாரங்களும் வெளிச்சத்துக்கு வந்ததோடு, இறுதியில் அந்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் மறுபிறவி உண்மையா? என்பது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. குழந்தை எப்படி கடந்த பிறவியை துல்லியமாக நினைவுகூர முடிகிறது? இது ஒரு உண்மையான மறுபிறவியின் சம்பவமா, அல்லது குழந்தையின் மனதில் ஏதாவது சிக்கலா? என்ற கேள்விகள் சமூகத்திலும், அறிவியல் வட்டாரங்களிலும் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

உலகம் முழுவதும் மறுபிறவி சம்பந்தமான ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. பல சிறிய குழந்தைகள் தங்கள் முந்தைய வாழ்க்கையை நினைவுகூர்ந்து, அதுபோன்ற சம்பவங்களை பகிர்ந்து கொண்டதாகப் பதிவுகள் உள்ளன. இதுபோன்ற பல விவரங்களை அமெரிக்காவில் உள்ள மனோநலம் ஆய்வாளர் டாக்டர் இயான் ஸ்டீவன்சன் தனது ஆய்வுகளில் பதிவு செய்துள்ளார். அவர் உலகம் முழுவதும் 2,500க்கும் மேற்பட்ட மறுபிறவி சம்பவங்களை ஆய்வு செய்துள்ளார். இந்த சம்பவம் சமூக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.