கேரளா மாநிலம் திருச்சூர் எளவள்ளியில் உள்ள பிரம்மகுளம் பைங்கன்னிக்கல் பகவதி அம்மன் கோவிலில் நேற்று திருவிழா நடைபெற்றது. இதன் அணிவகுப்புக்கு சிறக்கல் பகுதியில் இருந்து கணேஷ் என்ற யானையை அழைத்து வந்தனர். இந்நிலையில் கோவில் அருகே உள்ள குளத்தில் யானையை குளிப்பாட்டுவதற்காக இறக்கிய போது, திடீரென மிரண்டு போன அந்த யானை பாகனை மிதித்துவிட்டு ஓட தொடங்கியது. இதில் பாகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து 4 கிலோமீட்டர் தூரத்துக்கு மிரண்டு ஓடிய யானையை, மயக்க ஊசியை செலுத்தி பாகன்கள் மற்றும் ஊர் மக்கள் சேர்ந்து கயிற்றை கட்டி யானையை லாரியில் ஏற்றினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பாகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.