
நாடு முழுவதும் சாலை விபத்துகளை தவிர்க்க போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் கடைபிடிப்பது கட்டாயம். அதன் பிறகு போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுவது வழக்கம். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது, மது குடிக்காமல் வாகனம் ஓட்டுவது மற்றும் காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவது, இருசக்கர வாகனத்தில் இரு நபர்களுக்கு மேல் செல்லக்கூடாது போன்ற பல்வேறு சாலை விதிமுறைகள் அமலில் இருக்கிறது. ஆனால் இந்த சாலை விதிமுறைகளை பெரும்பாலானோர் கடைப்பிடிக்கவில்லை. இதன் காரணமாக போக்குவரத்து துறை காவலர்களால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதோடு அபராதமும் விதிக்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக தற்போது 1,82,375 பேரின் ஓட்டுனர் உரிமைகளை ரத்து செய்ய வேண்டும் என தமிழக காவல்துறை பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாக டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஜூலை முதல் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக 76,15,713 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 39,924 டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இதைத் தொடர்ந்து மேலும் 1.82 லட்சம் பேரின் டிரைவிங் லைசென்ஸை ரத்து
செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.