
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டார். அங்கு சான்பிரான்சிஸ்கோவில் முதலீட்டார்கள் மாநாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த முதலீட்டார்கள் மாநாட்டில் பல முன்னணி தொழில் நிறுவனங்கள் பங்கேற்றனர் அதாவது நோக்கியா, பேபால், ஈல்ட்டு, இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த் கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய நிறுவனங்கள் ₹900 கோடி முதலீட்டில் சென்னை, கோவை மற்றும் மதுரையில் 4100 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் ஒப்பந்தங்கள் மேற்கொண்டனர்.
இந்நிலையில் முதலமைச்சர் சான்பிரான்சிஸ் கோவிலிருந்து, சிகாகோ மாகாணத்திற்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு புலம்பெயர் தமிழர்கள் சிலம்பம், நடனம் என பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளித்தனர். சான்பிரான்சிஸ் கோவில் முக்கிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்துரையாடினார்.