
அம்பேத்கர்.! அம்பேத்கார்.! என முழக்கமிடுவது இப்போது ட்ரெண்ட் ஆகிவிட்டது. அதற்கு பதிலாக கடவுளின் பெயரை உச்சரித்தால் சொர்க்கத்திலாவது இடம் கிடைக்கும் என மந்திரி அமித்ஷா கூறியுள்ளார். அதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தளபதிவில், உயிரோடு இருக்கும் போது சோறு தராத கடவுள் செத்த பிறகு சொர்க்கம் தரும் என்பதை எப்படி நாம் நம்ப முடியும்..? சொர்க்கம் இருக்கா.? இல்லையா.? என்பது கூட யாருக்கும் தெரியாது. அண்ணல் அம்பேத்கர் பெயரைச் சொன்னால் வாழும் பூமியையே சொர்க்கமாக மாற்ற முடியும். மேலும் அதற்காக வாழ்ந்து வழிகாட்டிய பெருந்தகை அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அழகும், நிறைவும் கொண்ட வாழ்க்கையை சொர்க்கத்தில் அல்லாது நாம் வாழ்கின்ற பூமியில் படைக்க பாடு படுகின்றேன் என்றார்.
பொதுவுடமை தத்துவத்தின் பிதாமகன் எங்கள் தாத்தா ஜீவானந்தம் அப்படி ஒரு சொர்க்கத்தில் எப்படி எல்லாம் வாழலாம் என்று சொல்லி வைத்தார்களோ அப்படியெல்லாம் இப்போது வாழ்கின்ற பூமியிலே தன் மக்களை வாழவைக்க அரும்பாடு ஆற்றியவர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். எப்போதும் கடவுள் பெயரை உச்சரித்த நீங்கள் தான் அயோத்தியில் தோற்றுப் போனீர்கள். அண்ணல் அம்பேத்கர் பெயரை உச்சரித்தவர்கள் தான் அங்கு வென்றார் என்று கூறியுள்ளார். இப்பொழுது சொல்லுங்கள் நாங்கள் யார் பெயரை உச்சரிக்க வேண்டும் என்று தனது பதிவில் கூறியுள்ளார்.