
அமெரிக்காவில், கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த கொடுமையான சம்பவம் சமீபத்தில் கண்டனத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த பள்ளியின் கணக்கு ஆசிரியர் மாணவர்களுக்கு இளைப்பாறும் நேரம் கொடுக்காமல், கழிவறைச் செல்வதைத் தடுக்க “போனஸ் மதிப்பெண்கள்” வழங்கியதாக கூறப்படுகிறது. மாணவர்களின் இயற்கையான தேவையை அடக்கி, கல்வியில் மதிப்பெண்களை மட்டுமே முக்கியமாகக் கருதுவது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது.
இந்த கொடுமையை முதலில் ஒரு மாணவியின் தாயே வெளியே கொண்டு வந்தார். அவர் சமூக வலைத்தளத்தில், “என் மகளின் கணித ஆசிரியர், வாரத்திற்கு ஒரு நாளே பள்ளியில் கழிவறைச் செல்ல அனுமதிக்கிறார். அதை பயன்படுத்தாமல், வகுப்பறையில் அமர்ந்து பாடம் கற்ற மாணவர்களுக்கு கூடுதல் அகாடமிக் பாயிண்ட்ஸ் வழங்குகிறார்” என்று பதிவிட்டார்.இதற்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.