சேலம் மாவட்டத்தில் உள்ள நரசிங்கபுரம் ஜெ.ஜெ நகர் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இதற்கு சித்ரா என்ற மாணவி உள்ளார். இவர் காவல் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு சம்பரீஷ்(14) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று சம்பரீஷ் தனது தந்தையின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு ஆத்தூர்-சேலம் சாலையில் சென்று கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த சிறுவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தினர். அங்கு சிகிச்சை பலனின்றி சம்பரீஷ் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த தகவலை அறிந்த சித்ரா மயக்கம் போட்டு விழுந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மாணவனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முடிவு எடுத்திருப்பதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.