சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக, அக். 15ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வானிலை மையம் வெளியிட்ட எச்சரிக்கையின்படி, இப்பகுதிகளில் புயல் மற்றும் கனமழை தொடரும் வாய்ப்புள்ளதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தனியார் நிறுவனங்கள், குறிப்பாக ஐ.டி நிறுவனங்கள், தங்களுடைய ஊழியர்களை அக். 15 முதல் 18 ஆம் தேதி வரை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. கூடுதலாக, மெட்ரோ ரயில் மற்றும் பறக்கும் ரயில் சேவைகளின் எண்ணிக்கைகள் அதிகரிக்கப்படவுள்ளன.