நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் எஸ் பி ஐ வங்கி கணக்கு வைத்திருந்தால் அதில் நீங்கள் பரிவர்த்தனை செய்யாமல் உங்கள் கணக்கில் இருந்து 436 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வந்திருக்கும். எஸ்பிஐ மட்டுமல்லாமல் பிற வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அக்கவுண்டில் இருந்து இந்த மாதம் 436 பிடித்தம் செய்ய வாய்ப்புள்ளது.

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி காப்பீடு திட்டத்தின் கீழ் இரண்டு லட்சம் வரை ஒரு ஆண்டுக்கு ஆயுள் காப்பீடு வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற சம்மதம் தெரிவித்து இருந்தால் இந்த தொகை உங்களுக்கு பிடிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஆண்டுதோறும் மே மாதத்தில் இந்த தொகை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.