மக்களுடைய தேவையை பூர்த்தி செய்வதில் வங்கிகள் முக்கிய பங்காற்றி வருகிறது. அத்தகைய பணம் பற்றாக்குறை இருக்கும் பட்சத்தில் மக்கள் வங்கியில் கடன் வாங்க நினைக்கிறார்கள். சில தாங்கள் வாங்கும் பொருட்களை வங்கிகளில் கடன் வாங்கி மாதந்தோறும் வட்டியும் செலுத்தி வருகிறார்கள். மக்களுடைய தேவைக்கேற்ப வீட்டுக் கடன், தனிநபர் கடன், கல்வி கடன் என பல விதங்களில் கடன்  வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி எஸ்பிஐ வங்கியில் 18 முதல் 56 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பர்சனல் லோன் வழங்கப்படுகிறது. அரசு பணியில் அல்லது தனியார் பணியில் சுயமாக தொழில் செய்பவராக இருக்க வேண்டும். மாத ஊதியம் 15,000 வரை இருக்க வேண்டும். எட்டு  லட்சம் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது. ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், முகவரி சான்று, சம்பளம் பெறும் ரசீது மற்றும் அவருடைய ஆறு மாத கால சம்பள விவரம் ஆகியவற்றை சமர்ப்பிப்பதன் மூலமாக லோன் கிடைக்கும்.