நடிகை சம்யுக்தா சமீபத்தில் தனுசுக்கு ஜோடியாக வாத்தி படத்தில் நடித்து பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்து இருக்கிறார். வாத்தி படத்தில் அவரின் நடிப்புக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கும் நிலையில் அடுத்து அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சம்யுக்தா இதற்கு முன் மலையாள திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் தயாரிப்பாளர் தாமஸ் அளித்துள்ள பேட்டி வைரலாகி உள்ளது.

தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததற்காக 65 சதவீதம் சம்பளம் மட்டுமே சம்யுக்தாவுக்கு கொடுத்திருந்தேன் எனவும் படம் தோல்வி அடைந்த நிலையில் சம்யுக்தா மீதமுள்ள சம்பளத்தை கொடுக்க வேண்டாம் என்று தன்னிடம் கூறியதாகவும் அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார். சம்யுக்தாவின் இந்த செயல் பாராட்டுகளை பெற்று வருகிறது.