உக்ரைன்- ரஷ்யா போர் கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. தற்போது 3ஆண்டுகளைக் கடந்தும் தொடர்ந்து போர்  நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள டிரம்ப் பல  முயற்சிகளை மேற்கொண்டார்.

இருப்பினும் ரஷ்ய அதிபர் அதற்கு ஒத்துப் போகவில்லை. இந்நிலையில் தற்போது ரஷ்யாவின் விமானப்படைத்தளங்களை குறிவைத்து உக்கிரன் 117 ட்ரோன்களை ஏவியுள்ளது. அதனால் ரஷ்யாவில் 30 போர் விமானங்கள் சேதமடைந்துள்ளன.

இதனை அடுத்து ரஷ்யா கிரிமியாவை இணைக்கும் பாலத்தை குண்டுகள் வைத்து தகர்த்து எறிந்தது. இச்சூழலில் ரஷ்ய அதிபர், அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் தொலைபேசியில் பேசியுள்ளார். அதன் பின் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளதாவது, உக்ரைனின் தாக்குதல்களுக்கு ரஷ்யா தக்க பதிலடி கொடுக்கப் போகிறது. மேலும் போர் நிறுத்தத்திற்கு சாத்தியம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.