சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த முகமது இத்ரீஸ் என்பவரின்  வங்கிக் கணக்கில் தவறாதாக 750 கோடி ரூபாய் கிரெடிட் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. மேலும் முகமது முகமது இத்ரீஸ் வங்கி கணக்கை கோடக் மகேந்திரா வங்கி முடக்கி வைத்துள்ளதாகவும் தற்போது குற்றச்சாட்டு எழுந்திருக்கின்றது.

அண்மையில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் இருந்து ஆட்டோ ஓட்டுனரின் வங்கி கணக்கில் தவறுதலாக 9 ஆயிரம் கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டது சர்ச்சையான நிலையில்,  தற்போது மீண்டும் அதுபோன்ற ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது. கோடக் மகேந்திரா வங்கியில் இருந்து மருந்தக ஊழியரின் வங்கி கணக்கில் தவறுதலாக 750 கோடி ரூபாய் கிரெடிட் ஆகி உள்ளது. சம்பந்தப்பட்டவரின் வங்கி கணக்கை வங்கி முடக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.