
டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் வீட்டில் இரண்டாவது நாளாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து அமைச்சர் முத்துசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, அரசியல் உள்நோக்கத்தோடு அமலாக்கத்துறை சோதனை செய்கிறது.
உச்சநீதிமன்றம் விதிமுறைகளை மீறி அமலாக்கத்துறை செய்யும் அரசியல் பலிவாங்கல் நடவடிக்கைக்கு கண்டனம். அதிமுக ஆட்சியில் விஜிலென்ஸ் பதிவு செய்த வழக்குகளை அடிப்படையாகக் கொண்டு சோதனை நடத்தி வருகிறது. அதிமுக ஆட்சியில் பதிந்த வழக்கை திமுக ஆட்சியில் நடைபெற்றது போல சித்தரிப்பதற்காகத்தான் இந்த ரெய்டு.
எந்த ஆதாரமும் இல்லாமல் ரூபாய் 1000 கோடி ஊழல் என்ற கற்பனை செய்தியை அமலாக்கத்துறை வெளியிட்டது. இதனை நியாயப்படுத்த அமலாக்கத்துறை டாஸ்மாக் நிறுவன ஊழியர்களை தொடர்ந்து துன்புறுத்தி வருகிறது.
அமலாக்கத்துறை நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்து சட்டபூர்வ நடவடிக்கைகளையும் மேற்கொண்டு நமது அலுவலர்களுடன் அரசு எப்போது துணை நிற்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது