
ஒடிசா மாநிலத்தில் அரிசி ஆலை ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆலையில் வழக்கமாக வியாபாரி வர்மா என்பவர் அரிசி வாங்குவார். இவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள கிரிசோலா பகுதியில் வசித்து வருகிறார். இவர் இந்த அரிசி ஆலைக்கு சென்று பலமுறை அரிசி வாங்கிவிட்டு உடனடியாக பணத்தை செலுத்தி வந்திருக்கிறார் . இந்நிலையில் வர்மா தனது கூட்டாளியுடன் சேர்ந்து அரிசி ஆலை உரிமையாளரிடம் சென்று பின்பு பணம் தருகிறோம் என்று கூறிவிட்டு ரூ 77.26 லட்சம் மதிப்பிலான அரிசியை வாங்கியுள்ளனர்.
அதற்கு அரிசி ஆலையின் உரிமையாளரும் வழக்கமான வாடிக்கையாளர் என்பதால் நம்பிக்கையாக அரிசியை கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து பணத்தை திருப்பி தருவதாக கூறிய இருவரும் பல நாட்களாக ஏமாற்றி வந்துள்ளனர். இந்த சம்பவம் பல ஆண்டுகளாக தொடர்ந்த நிலையில் அரிசி ஆலையின் உரிமையாளர் ரூ.77.26 லட்சத்தை ஏமாற்றிய வியாபாரிகள் மீது கோலந்தாரா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மோசடி செய்த வர்மாவை காவல்துறையினர் கைது செய்தனர். அதோடு இந்த மோசடியில் இவருடன் இருந்த நண்பரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.