
நம் அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்றாக ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு போன்றவை இருக்கிறது. இந்த ஆவணங்களில் ஏதேனும் திருத்தம் இருப்பின், நாம் அந்தந்த அலுவலகங்களுக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டி இருக்கும். ஆனால் தற்போது ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் மற்றும் ரேஷன் கார்டுகளில் தவறு ஏற்பட்டவர்களுக்கு ஒரு குட் நியூஸ் வெளியாகி இருக்கிறது.
அந்த அடிப்படையில் ஆதார் ,ரேஷன் உள்ளிட்ட ஆவணங்களில் விவரங்களை புதுப்பிக்க வேண்டி இருந்தால், அந்தந்த அலுவலகங்களுக்கு செல்லாமல் தானாகவே அனைத்து விவரங்களையும் புதுப்பிக்கும் வகையில் ஒரு புதிய அமைப்பை தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உருவாக்கி வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.