18 ஆவது ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்று இருந்தது. இதன் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூர் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதினர். இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் எடுத்து 190 ரன்கள் எடுத்தது.

 

 

View this post on Instagram

 

A post shared by Virat Kohli (@virat.kohli)

இதையடுத்து 191 ரன்கள் எடுத்தால் சாம்பியன் பட்டத்தை வெல்லலாம் என்ற நிலையில் களம் இறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பெங்களூர் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றது. இதையடுத்து பெங்களூரில் நேற்று ஆர் பி சி வெற்றி பேரணி நடைபெற்றது.

இதில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் நட்சத்திர வீரரான விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது வார்த்தைகளால் கூற முடியவில்லை முற்றிலும் மனம் உடைந்து விட்டது என்று தெரிவித்துள்ளார்.