
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் PSLV 60 ராக்கெட் டிசம்பர் 3 ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியதாவது, PSLV 60 ராக்கெட் அதன் புவிவட்டப் பாதையில் ஸ்பே டெக்ஸ் செயற்கைக்கோளை நிலை நிறுத்தியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இதுவரை 99 ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்திற்குள் 100ஆவது ராக்கெட்டை ஏவும் பணி தீவிர படுத்தப்பட்டு வருகிறது.
செயற்கை கோள்களான “ஸ்பே டெக்ஸ் ஏ,ஸ்பே டெக்ஸ் பி” 20 கிலோமீட்டர் இடைவெளியில் புவிவட்டப் பாதையில் சுற்றி வருகிறது இந்த இடைவெளி பின்னர் 15 கிலோமீட்டர் ஆக கொண்டு வரப்படும். வரும் ஜனவரி மாதம் 7ஆம் தேதிக்குள் ஸ்பேஸ் டாக்கிங் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கும் புதிய சிந்தனையை குறைந்த செலவில் இஸ்ரோ செயல்படுத்தி உள்ளது. இதுவரை 3 நாடுகள் இந்த தொழில்நுட்ப ஒருங்கிணைப்பை செயல்படுத்தி உள்ளன. தற்போது 4ஆவதாக இந்தியாவும் செயல்படுத்தி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
இதைத்தொடர்ந்து இஸ்ரோ பெரிய அளவிலான செயற்கைக்கோள்கள் ஒருங்கிணைப்பு திட்டத்தை செயல்படுத்த உள்ளது. வரும் காலங்களில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பி 12 மணி நேரத்திற்குள் செயற்கைக்கோள்களை செயல்படுத்தும் திட்டங்களை மேற்கொள்ள ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளோம். இரண்டு செயற்கை கோள்கள், 24 ஆய்வுக் கருவிகள் இணைக்கப்பட்டு குறைந்த செலவில் விண்ணில் ஏவப்பட்டு உள்ளன. இவை வரும் நாட்களில் புவி வட்ட பாதையில் ஆய்வுகளை மேற்கொள்ளும். இவ்வாறு இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார்.