
இந்தியாவில் டிஜிட்டல் முறையில் பணம் பரிவர்த்தனை செய்வது என்பது மிகவும் அதிகமாகிவிட்டது. இந்த நிலையில் டிஜிட்டல் பேமென்ட் வசதியை அதிகப்படுத்துவதற்காக வாட்ஸ் அப் நிறுவனம் வாட்ஸ் அப் மூலம் பேமெண்ட் செய்து கொள்ளும் வசதியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு இந்திய தேசிய கார்ப்பரேஷன் அனுமதி கொடுத்த நிலையில் இந்தியா முழுவதும் 10 கோடி பயனர்களுக்கு மட்டுமே இந்த பயன்பாட்டை அனுமதித்திருந்தது. தற்போது வாட்ஸ் அப் பேமென்ட் வசதி அதிகமாக பயன்படுத்தப்படும் காரணத்தினால் அனைவரும் வாட்ஸ் அப் பேமெண்ட் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அறிவிப்பை தேசிய கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ளது.
இதன்படி 2025 ஆம் ஆண்டு முதல் வாட்ஸ் அப் பயன்படுத்தும் பயனர்கள் அனைவருமே டிஜிட்டல் பேமென்ட் முறையை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வாட்ஸ் அப் பேமெண்ட் முறை மிகவும் எளிதான வசதிகளை கொண்டுள்ளது. குறிப்பாக ஒரு வங்கி கணக்கு வைத்திருக்கும் பயனர் தன்னுடைய மொபைல் எண் மூலமாக நேரடியாகவே பணம் அனுப்பலாம். மேலும் கடைகள், தொழில் நடத்துபவர்கள், வியாபாரிகள் என அனைவரும் QR கோடு மூலம் பண பரிவர்த்தனை செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.