லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்டை நியமிக்க அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. சமீபத்தில் நடந்த மெகா ஏலத்தில் ரூ.27 கோடிக்கு அவரை எல் எஸ் ஜி வாங்கியது. இதன் மூலம் 2025 ஐபிஎல் சீசனில் அதிக விலை மதிக்கத்தக்க வீரராக பண்ட் மாறினார். அடுத்த சில ஆண்டுகளில் தோனி, ரோகித் சர்மாவுக்கு இணையான மதிப்பு கொண்டவராக பண்ட் மாறுவார் என எல் எஸ் ஜி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.