
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையில் மத்திய அரசின் வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் இன்று போராட்டம் நடைபெறும் என்று தமிழக வெற்றிக் கழகம் அறிவித்திருந்தது.
அதன்படி வக்பு சட்டத்தை கண்டித்து அனைத்து மாநிலத்தின் தலைநகரத்தில் போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தை முன்னிட்டு சென்னை பட்டினப்பாக்கத்தில் காவல்துறையினர் குவிந்தனர். அங்கு வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே தவெக ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். ஆர்ப்பாட்டத்திற்காக மேடை போட வேண்டும் என்று அனுமதி கேட்டபோது காவல்துறையினர் அனுமதியை மறுத்துள்ளனர்.