கத்தோலிக்க திருச்சபையின் 266 வது திருத்தந்தையாக இருப்பவர் போப் பிரான்சிஸ்(88). இவர் நிமோனியா மற்றும் சிறுநீரக குறைபாடு காரணமாக சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் சுவாசிப்பதில் சிரமம் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை அடுத்து பிப்ரவரி 14ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சுவாச குழாய் தொற்று, இரு நுரையீரலிலும் நிமோனியா மற்றும் லேசான சிறுநீரக செயலிழப்பு கண்டறியப்பட்டது.

இதற்காக பிரான்ஸ் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் போப் பிரான்சிஸ் விரைவில் குணமடைய வேண்டி வாடிகன் நகரில் ஜெயிண்ட் பீட்டர் சதுக்கம் அருகே ஒன்று கூடி பிரார்த்தனைக் கூட்டம் நடத்தினர். சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற பிரார்த்தனையில் பொதுமக்கள் மழை மற்றும் குளிர்ந்த வானிலையை கூட பொருட்படுத்தாமல் ஜெபமாலையை கைகளில் ஏந்தியவாறு போப் பிரான்சிஸ்க்கு உடல்நலம் குணமடைய தீவிரமாக பிரார்த்தனை செய்தனர்.

இந்தப் பிரார்த்தனை கூட்டத்தில் 4000க்கும்  மேற்பட்டோர் ஒன்றுகூடி இருந்தனர். இதனை அடுத்து நேற்று மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டதாவது, போப்பின் உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவர் இன்னும் ஆபத்தான நிலையில் தான் உள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.