புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பூங்கொடி கிராமத்தைச் சேர்ந்த ராமேஸ்வரி, அவரது உறவினர் புனிதா ஆகிய இருவரும் குழந்தைகளுடன் அறந்தாங்கி கட்டுமாவடியில் காதணி விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளனர். அங்குள்ள பேன்சி ஸ்டோரில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு இருவரும் குழந்தைகளுடன் அறந்தாங்கி பேருந்து நிலையம் நோக்கி சென்றுள்ளனர்.

அப்போது ராமேஸ்வரி, புனிதா ஆகிய இருவரின் மகள்கள் கழுத்தில் அணிந்திருந்த தலா 1 கிராம் தங்க தாயத்து காணாமல் போனதை கொண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் தங்க தாயத்தை திருடிய மஞ்சுளா என்ற பெண்ணை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த இரண்டு கிராம் தங்க தாயத்தை பறிமுதல் செய்தனர்.