இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் போதையற்ற தமிழ்நாடு என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கும் இயக்கத்தை தமிழ்நாடு முழுவதும் நடத்தி வந்தனர். அதன் நிறைவு விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பங்கேற்கிறார். மேலும் விழா தொடர்பான துண்டு பிரசுரத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வழங்கி வந்தனர்.

நேற்று முன்தினம் பெரம்பலூர் நிர்மலா நகர் பகுதியில் இருக்கும் செல்போன் கடையில் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. அப்போது செல்போன் கடை உரிமையாளர் இளையராஜா என்பவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்து துண்டு பிரசுரத்தை கிழித்ததாக தெரிகிறது. இது தொடர்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சக்திவேல் பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.