
விமானங்களில் பைலட்டுகள் அவசரகாலங்களில் ஆக்ஸிஜன் முகமூடிகளை பயன்படுத்தும் போது, அந்த முகமூடிகள் முகத்தை சுற்றி இறுக்கமாக ஒட்டியிருக்கும் வகையில் இருக்க வேண்டும். இதனால் ஆக்ஸிஜன் சரியாக வழங்கப்பட்டு பைலட்டின் சுவாசத்தை பாதுகாக்க முடியும். விமானங்களில் உயரம் அதிகரிக்கும் போது ஆக்ஸிஜன் அளவு குறையக் கூடும், இதுபோன்ற சூழலில் ஆக்ஸிஜன் முகமூடி பைலட்டின் உயிர் காப்பதற்கு முக்கியமானது.
ஆனால், பைலட்டுக்கு தாடி இருந்தால், அந்த முகமூடி முகத்தை முழுமையாக மூடுவதில் இடையூறாக இருக்கும். தாடி முகமூடியின் இறுக்கத்தை குறைத்து, ஆக்ஸிஜன் கசிவிற்கு வழிவகுக்கும். இதன் விளைவாக, பைலட் முறையாக ஆக்ஸிஜனைக் கொண்டு சுவாசிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். இதுபோல் பிரச்சனை பைலட் மட்டுமின்றி பயணிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்த பிரச்சனையைத் தவிர்க்க, பைலட்டுகள் தாடியை அகற்ற வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது.