இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலம் பணம் பறிப்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. மர்ம நபர்கள் சிலர் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து அவர்களது வங்கி கணக்கு விவரங்களை வாங்கிக் கொண்டு பண மோசடி செய்து வருகின்றனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் fedex  என்ற கொரியர் நிறுவனத்தின் இருந்து பேசுவதாக கூறி சிலர்  மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் சிலர் தபால் நிலையங்களில் இருந்து தொடர்பு கொள்வதாக கூறியும் ஏமாற்றி வருகின்றனர். எனவே போலீசார் இது போன்ற அழைப்புகள் வரும்போது பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.