4 வருட இடைவெளிக்கு பின் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் பதான் படம் இன்று வெளியாகி இருக்கிறது. 100-க்கும் அதிகமான நாடுகளில் 2500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து சென்சார் போர்டிலிருந்து ஏற்கனவே பதான் படத்தில் நிறைய வன்முறை மற்றும் ஆபாச ஜோக்குகள் இருக்கிறது என கூறப்பட்டது. இந்நிலையில் பதான் படம் குறித்து ரசிகர்கள் தங்கள் கருத்தை டுவிட்டர் வாயிலாக வெளியிட்டுள்ளனர். பதான் ஒரு சிறந்த திரில்லர் திரைப்படமாக உள்ளது.

அதோடு ஷாருக்கான், தீபிகா படுகோன் கெமிஸ்ட்ரி நன்றாக இருப்பதாகவும், ஜான் அப்ரஹாமின் நடிப்பு அபாரமாக உள்ளதாகவும் கூறியுள்ளனர். அதிலும் குறிப்பாக சல்மான் கானின் 10 நிமிட சிறப்பு தோற்றம் திரைப்படத்தின் ஹைலைட்டான விஷயமாக அமைந்துள்ளது. பாடல்கள் உடன் ஒட்டுமொத்த கதைக்களமும் நன்றாக உள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. என்னதான் ஆங்காங்கே சில குறைகள் இருந்தாலும் ஒட்டு மொத்தமாக இந்த படம் பார்ப்பவர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்பதே ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

ஆகவே பதான் திரைப்படத்தின் வாயிலாக ஷாருக்கான் மட்டுமின்றி பாலிவுட் திரையுலகமே வெற்றிப் பாதைக்கு திரும்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையில் சில நெட்டிசன்கள் விஎப்எக்ஸ் மிகவும் மோசமாக உள்ளதாக கருத்து தெரிவிக்கின்றனர். வர்த்தக நிபுணர் சுமித் கதல் இப்படத்திற்கு 4.5 ரேட்டிங் கொடுத்து உள்ளார்.