விஜய் தொலைக்காட்சியில் சிப்பிக்குள் முத்து தொடரின் வாயிலாக சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் லாவண்யா. சீரியலில் நடிப்பதற்கு முன்னதாகவே மாடல் அழகியாக பிரபலமான இவர், சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்பு தேடி அலைந்தார். அப்போது தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தை லாவண்யா பகிர்ந்துள்ளார். பிரபல இயக்குநர் ஒருவர் லாவண்யாவை தன்னிடம் போனில் பேசிக் கொண்டே இருக்கவேண்டும். அவ்வாறு செய்தால் 6 மாதத்திற்கு பின் அவரது கேரியரையே வேற லெவலுக்கு எடுத்துச் செல்வேன் என கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த லாவண்யா, இந்த விவகாரத்தை தற்போது பெரிதாக்கினால் நம் எதிர்காலத்தை முடித்து விடுவார்கள் என பயந்து அமைதியாகி விட்டாராம். அதன்பின் அந்த இயக்குநரிடமிருந்தும் விலகி விட்டாராம். இப்போது லாவண்யா பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.