
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த ரெட்ரோ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சூர்யாவுடன் பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, பஹல்காம் தாக்குதலில் ஈடுபடுபவர்களுக்கான கல்வியை உறுதி செய்வதும், அவர்கள் மூளை சலவை செய்யப்படுவதை தவிர்ப்பதும் தான் காஷ்மீரில் நடக்கும் பிரச்சனைக்கு தீர்வாக அமையும்.
காஷ்மீர் இந்தியா உடையது, அங்கு வாழும் மக்களும் இந்தியர்கள். 2 ஆண்டுகளுக்கு முன்பாக குஷி படத்தின் படப்பிடிப்புக்காக அங்கு சென்றிருந்தேன். அங்கு வாழும் மக்கள் எனக்கு நல்ல நினைவுகளை பரிசாக வழங்கினார்கள். பாகிஸ்தானால் அவர்கள் நாட்டின் சொந்த மக்களையே கவனித்துக் கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு முறையான மின்சாரம் வசதியோ, தண்ணீரோ இல்லை. அப்படி இருக்கும்போது அவர்கள் இங்கு வந்து என்ன செய்யப் போகிறார்கள். இந்தியா பாகிஸ்தானை தாக்க வேண்டிய அவசியம் கிடையாது.
500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பழங்குடியினர் எப்படி சண்டை போட்டார்களோ அப்படி தான் அவர்களும் இருக்கிறார்கள். நாம் ஒருவரை ஒருவர் நேசிக்க வேண்டும். ஒற்றுமையுடன் மக்களாக ஒன்றிணைய வேண்டும். கல்வியை சிறந்த ஆயுதம், மகிழ்ச்சியாக இருந்து நம்ம பெற்றோர்களை மகிழ்வுடன் வாழ செய்யும் போது நாம் முன்னேற முடியும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் பழங்குடியினரை குறித்து விஜய் தேவர் கொண்ட பேசியதற்கு எதிராக ஹைதராபாத் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
கிஷன் லால் சவுகான் என்ற வழக்கறிஞர் காவல் நிலையத்தில் விஜய் தேவர் கொண்ட மீது வழக்கு புகார் அளித்தார். அந்த மனுவில் விஜய் தேவரகொண்டாவின் கருத்துக்கள் பழங்குடி சமூகத்தை புண்படுத்தும் வகையிலும், இழிவு படுத்துவதாகவும் இருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.