துப்பாக்கி திரைப்படத்தில் தளபதிக்கு வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் பாலிவுட் நடிகர் வித்யுத் ஜாம்வால். இதையடுத்து பில்லா-2 திரைப்படத்தில் அஜித்துடனும் சூர்யாவுக்கு நண்பனாக அஞ்சான் படத்திலும் நடித்து இருந்தார். இப்போது பாலிவுட்டில் சோலோ ஹீரோவாகவும் தன் திறமையை நிரூபித்து வருகிறார் வித்யுத் ஜாம்வால்.

இந்நிலையில் வித்யுத் ஜாம்வால் பஞ்சாப் அமிர்தசரஸிலுள்ள பொற்கோயிலுக்கு சென்று வழிபட்டிருக்கிறார். அதோடு பொற்கோயிலில் நேர்த்திக் கடனின் ஒரு பகுதியாக அங்குள்ள பாத்திரங்களை கழுவி சுத்தம் செய்து சேவை செய்துள்ளார் வித்யுத் ஜாம்வால். இது தொடர்பான புகைப்படம் சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.