ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய மாநில காவல்துறை அதிகாரிகள், மத்திய ஆயுதப்படை வீரர்கள் மற்றும் ரயில்வே காவல்துறை அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்களுக்கு ஜனாதிபதி விருது மற்றும் பதக்கம் வழங்கப்படும். இந்த ஆண்டு நாடு முழுவதும் 746 ஜனாதிபதி விருதுகள் மற்றும் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய ஜனாதிபதி விருது தமிழகத்தைச் சேர்ந்த ஜ.ஜி.கள் துரைக்குமார் மற்றும் ராதிகா ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தைச் சேர்ந்த 21 காவல் அதிகாரிகளுக்கு சிறப்பாக பணியாற்றியதற்காக ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள அனைவரும் நாளை டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு விருது வழங்கி கவுரவிக்க உள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த காவல்துறை சுப்பிரண்டுகள், ஜெயலட்சுமி ஜி.ஸ்டாலின், கூடுதல் சுப்பிரண்டுகள், எஸ். தினகரன், பிரபாகரன், துணை கமிஷனர் வீரபாண்டி, இணை போலீஸ் சூப்பிரண்டுகள் மதியழகன், பாபு மற்றும் போலீஸ் அதிகாரிகள் சந்திரசேகரன், கணேஷ், ஜெடிடியா, பிரபாகர், பிரதாப் பிரேம்குமார், தென்னரசு, வேலு, அகிலா, குமார், அசோகன், சுரேஷ் குமார், விஜயலட்சுமி, சிவக்குமார், ஆர்.குமார் ஆகியோருக்கு நாளை திரவுபதி முர்மு விருது வழங்கி கவுரவிக்க உள்ளார்.