
இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பல்வேறு விதமாக, கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இது குறித்த தகவல்கள் தினம் தினம் செய்தித்தாள்களில் வந்து கொண்டுதான் இருக்கிறது. இதை பார்க்கும்பொழுது நெஞ்சமே பதறுகிறது. அரசு பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு தக்க தணடனை கொடுத்தாலும் இன்னும் பாலியல் குற்றங்கள் குறைந்தபாடில்லை.
அந்தக்கதையில் மும்பையில் 5 வயது சிறுமியை 15 வயது சிறுவன் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி பள்ளி சுவற்றில் அழுதபடி உட்கார்ந்து இருந்திருக்கிறார். அந்த வழியாக சென்றவர் சிறுமியிடம் விசாரித்ததில் அவர் தகவலை சொல்லி இருக்கிறார். உடனடியாக சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் பலாத்காரம் செய்த சிறுவனை கண்டுபிடித்தனர். அவன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.