மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய இரு மாநிலங்களுக்கும் பிரதமர் மோடி இன்று பயணம் மேற்கொண்டார். மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்ட அவர் லட்சாதிபதிகளாக பெண்கள் மாற்றும் திட்டத்தை அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து அவர் 11 லட்சம் பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார்.

அதன்பின் 2 மாதத்தில் புதிதாக 11 லட்சம் பெண்கள் கோடீஸ்வரராக இருப்பதாகவும் அதற்காக ரூபாய் 2500 கோடி நிதியை 4.3 லட்சம் சுய உதவி குழுவை சேர்ந்த 48 உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில் ஒதுக்க உள்ளதாக கூறியுள்ளார். இதை தவிர துபாய் 5000 கோடி நிதியை 2.35 லட்சம் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 25.8 லட்சம் உறுப்பினர்களுக்கு பயன்பெறும் வகையில் கடனுதவி வழங்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் வீட்டில் இருந்து E-FIR மூலம் பெண்கள் புகார் அளிக்க வசதி இருப்பதாகவும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரை தண்டிக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.