
அரியானாவில் பணியில் இருக்கும் போது ராணுவ வீரர்கள் மற்றும் மத்திய ஆயுத போலீஸ் படையினர் உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்படும். அப்படி வழங்கப்படும் இழப்பீடு தொகை, 50 லட்சத்தில் இருந்து ஒரு கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று முதல்-மந்திரி நயப் சிங் தலைமையில், இதற்கான ஒப்புதல் வழங்க உள்ளதாக கூறப்பட்டது.
அதன்படி முப்படைகளை சேர்ந்த ஆயுதப்படை வீரர்கள் போரின் போதோ, வெடிகுண்டு வெடிப்பின் போதோ, பயங்கரவாத தாக்குதல் அல்லது எல்லைப் பகுதிகளில் மோதல் மற்றும் ஐநா அமைதி பாதுகாப்பு படையின் பணியில் ஈடுபடும் போதோ உயிரிழக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகை வழங்கப்படும். இதே போன்று மத்திய ஆயுத போலீஸ் படையினர் இயற்கை பேரிடர், தேர்தல்கள் மீட்பு நடிவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளின் போது உயிரிழக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.