
ஐபிஎல் தொடர் 2025 ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இதில் சிஎஸ்கே அணி ஐந்து வீரர்களை தற்போது தக்க வைத்துள்ளது. அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள அணியும் சிஎஸ்கே தான். சிஎஸ்கே அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளார். சிஎஸ்கே அணியின் உரிமையாளர் காசி விஸ்வநாதன் சமீபத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில் அவர் கூறியதாவது, மகேந்திர சிங் தோனி சிஎஸ்கே யில் தொடர்ந்து விளையாடுவார் என நம்புகிறோம். தோனி எப்போதும் சரியான முடிவை எடுப்பார் என நான் நம்புகிறேன்.”தோனி விளையாட விரும்பும் வரை அவருக்கான கதவுகள் சிஎஸ்கே வில் திறந்தே இருக்கும்”. தோனியின் இறுதிப்போட்டி நிச்சயமாக சென்னையில் தான் இருக்கும் எனவும் கூறியுள்ளார்.