டெல்லியின் பெஹலாத்பூர் பகுதியில் கடந்த மே 28ஆம் தேதி மாலை 5.50 மணியளவில் நடந்த கொள்ளைச் சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வீட்டு வாசலில் அமர்ந்திருந்த ஒரு முதியவரிடம், பட்டப்பகலில் வந்து திருடி தங்கச் சங்கிலியை பறித்துச் செல்வது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இதில், கொள்ளையன் முதலில் அவரிடம் முகவரி கேட்டுப் பேசி, வாய்ப்பு பார்த்து சங்கிலியை பறிக்க முயற்சி செய்வதும், மறைமுகமாக மீண்டும் வந்து அதை பறித்துப் போவதும் தெளிவாக தெரிகிறது.

 

இந்த சம்பவம், தற்போது டெல்லியில் காவல்துறையின் தாக்கம் குறைந்துவிட்டதா? என்ற கேள்வியை எழுப்புகிறது. பொதுமக்கள் வீட்டு வாசலிலும் பாதுகாப்பாக இருக்க முடியாத நிலை உருவாகியுள்ளதைக் காட்டுகிறது. மக்கள் இதுபோன்ற சாலைப் பகுதியிலேயே பாதுகாப்பற்ற நிலையை எதிர்கொள்கிறார்கள் என்றால், காவல் துறையின் நடவடிக்கைகள் குறித்து சந்தேகம் எழுவது இயல்பாகிறது.

பாதிக்கப்பட்ட முதியவர் பாதுகாப்பாக இருக்கின்றது ஆறுதலளிக்கிறது என்றாலும், இந்த வகையான சம்பவங்கள் நகரில் வன்முறைகள் எவ்வளவு பொதுவாகிவிட்டன என்பதை உணர்த்துகிறது. மக்களின் பாதுகாப்பு குறித்து காவல்துறையும், நகராட்சி நிர்வாகமும் உடனடியாக முக்கிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.