CBSE  நிர்வாகம் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளுக்கு பாடத்திட்டங்களை மாற்றி அமைத்து உள்ளதாக அனைத்து CBSE பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகளுக்கான பாடத்திட்டம், கற்றல் ஒழுங்கு முறைகள், பரிந்துரைக்கப்பட்ட கற்பித்தல் நடைமுறைகள் மற்றும் மதிப்பீடு கட்டமைப்புகள் குறித்த விரிவான வழிகாட்டுதல்களை இந்த புதிய பாடத்திட்டம் வழங்குவதாக அறிவுறுத்தியுள்ளது.

இந்த புதிய பாடத்திட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ள ஆரம்ப பக்கங்களை பள்ளிகள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். புதிய பாடத்திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட பாடத்திட்டங்களுடன் பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும். அனுபவம் சார்ந்த கற்றல், திறன் சார்ந்த மதிப்பீடு, இடைநிலை அணுகுமுறை, மாணவர்களை ஒருங்கிணைத்து கருத்தியல், புரிதல் மற்றும் பயன்பாட்டு மேம்பாடு ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும் என இந்த சுற்றறிக்கையில் CBSE  நிர்வாகம் தெரிவித்துள்ளது.