
நாடு முழுவதும் தற்போது புதிய 20 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது. இந்த நோட்டுகள் பச்சை மற்றும் மஞ்சள் நிறம் கலந்து இருக்கும். அதோடு இந்த நோட்டில் மகாத்மா காந்தி புகைப்படமும் இருக்கும். இது போன்ற நோட்டுக்களை ரிசர்வ் வங்கி புதிதாக வெளியிட இருக்கிறது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது, இந்த நோட்டுகளில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சஞ்சய் மல்கோத்ராவின் கையெழுத்து இருக்கும். மற்றபடி வேறு எந்த மாற்றங்களும் இதில் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய 20 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டாலும், தற்போது புழக்கத்தில் உள்ள அனைத்து 20 ரூபாய் நோட்டுகளும் செல்லுபடி ஆகும் என்ற தகவலையும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.