கேரளாவில் மலையாள திரையுலகினரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள்  தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னதாக நடிகர் மோகன்லாலிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அதேபோல் மோகன்லால் திரைப்படங்களை தயாரித்த சினிமா தயாரிப்பாளர் ஆன்டனி பெரும்பாவூரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் கேரள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய பகத் பாசிலிடமும் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இவருக்கு சொந்தமான திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்திய நிலையில், தற்போது  இந்த விசாரணை நடந்துள்ளது.