
திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பிச்சை எடுத்தது அல்ல ஐபிஎஸ் பதவி என்ற அருண்குமாரின் ஸ்டேட்மெண்ட்டுக்கு பதில் அளித்துள்ளார். என்னிடம் காசு இல்லை. மக்களிடம் கையேந்தி தான் கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறேன். நிதி திரட்டி கட்சி நடத்திக் கொண்டிருக்கிறேன். எனது காசில் இருந்தும் தான் சம்பளம் பெறுகிறார்.
ஒழுங்காக ஐபிஎஸ் வேலையை மட்டும் பார்க்கட்டும். கன்னியாகுமரியில் பேசிய துரைமுருகனை திருவள்ளூரில் கைது செய்தது ஏன் எனவும், சாட்டை துரைமுருகனை கைது செய்த பிறகு செல்போன் உரையாடல்களை வெளியேசிய விட்டதற்கு காரணம் என்ன எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் யாருக்கு வேலை செய்கிறீர்கள்? ஆடியோ விளைவதற்கு ஐடிவிங்கில் வேலை செய்ய வேண்டியது தானே என விமர்சித்துள்ளார்.
மேலும் ஆடியோவை எடுத்து வெட்டி ஒட்டி வெளியிடுவதால் எத்தனை பேரில் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. வருண் குமார் ராஜினாமா செய்து விட்டு திமுக கட்சியில் சேர்ந்து விடலாம். என்ன இருந்தாலும் நாம் தமிழர் கட்சியினர் ஆபாசமாக எழுத மாட்டார்கள். நீங்கள் விருதுநகரில் எழுதியவனை திருச்சிக்கு தூக்கி வந்து கண்ணை கட்டி அடித்தது எதற்கு? திருச்சி புதுக்கோட்டையில் அருகருகே கணவன் மனைவிக்கு யார் சிவாரத்தில் பதவி கிடைத்தது என அடுக்கடுக்காக பல கேள்விகளையும் முன் வைத்துள்ளார்.
எங்கே குற்றம் நடந்தாலும் திருச்சிக்கு அழைத்து வந்து ஏன் விசாரணை நடத்துகிறீர்கள்? செல்போனை ஆய்வு செய்ய வேண்டியது போலீசின் வேலை கிடையாது. நாங்கள் செல்போனில் பேசுவது பொதுவெளியில் எப்படி பேசுகிறது கட்சிக்காரர்கள் உடன் ஆயிரம் பேசுவோம். அதை பொதுவெளியில் வெளியிடுவது ஏன் என சீமான் பேசியுள்ளார்.