மதுரையில் பாஜக சார்பில் நாளை மறுநாள் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதில் கலந்து கொள்ளும் பக்தர்கள் காவடி எடுப்பது, பால்குடம் எடுப்பது போன்ற நிகழ்ச்சிகளில் நடந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்துவதற்காக முருகன் பெயரில் மாநாடு நடத்துகின்றனர். மாநாட்டின் நோக்கத்தை பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டே இருப்போம். தமிழிலும் குடமுழுக்கு என்பது அதற்கான முதல் கட்டமாக எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழில் தான் குடமுழுக்கு என்ற நிலை ஒருநாள் வரும் என்று தெரிவித்தார்.