தலைநகர் டெல்லியில், 16 வயது சிறுவன் சச்சின் கொடூரமாக குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சச்சின் புதிதாக வாங்கிய ஸ்மார்ட்போன் குறித்து நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறு உயிரிழப்புக்கு காரணமானது. நண்பர்கள், சச்சினிடம் புதிய செல்போன் வாங்கியதற்காக ட்ரீட் கேட்க, சச்சின் தர மறுத்ததால் தகராறானது. இதையடுத்து, வாக்குவாதம் முற்றியதில் கத்தி குத்தி கொலை செய்யப்பட்டது.

குற்றச்சம்பவத்தின் போது, சச்சினின் நண்பர்கள், அவரை வழியில் தாக்கி, கத்தியால் முதுகில் குத்தி கொலை செய்ததாக போலீசார் விசாரணையில் உறுதிப்படுத்தினர். போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சம்பவத்தில் தொடர்புடைய மூன்று குற்றவாளிகளையும் கைது செய்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் சச்சின் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தார், அக்கம்பக்கத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த கொடூரம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.