
உத்தரபாண்டில் 13 வயது மகளை தன்னுடைய காதலனுக்கு, தன் தாயே இறையாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனாமிகா ஷர்மாவுக்கு திருமணமாகி 13 வயதில் மகள் உள்ள நிலையில் கணவனை பிரிந்து மகளுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அனாமிகாவுக்கு சுமித் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
காதலன் சுமித் கூறியபடி அனாமிகா தனது மகளுக்கு மதுபானம் கொடுத்து, சுமித் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து 8 முறை அந்த சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய அனுமதித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அச்சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி காவல் துறையினர் அனாமிகா, சுமித் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்தனர். கைதான அனாமிகா பாஜகவின் முன்னாள் பெண் நிர்வாகி என்பது தெரியவந்துள்ளது.