தமிழ் திரைப்படங்களில் மட்டும் அடுத்தடுத்து நடித்து வந்த தளபதி விஜய் வாரிசு படத்தின் வாயிலாக தெலுங்கு சினிமாவில் நேரடியாக என்ட்ரி கொடுத்தார். வம்சி டைரக்டு செய்த இந்த படம் வாரிசுடு எனும் பெயரில் தெலுங்கில் வெளியாகியது. தளபதிக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து இருந்தார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிய வாரிசு படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ திரைப்படத்தில் கேங்ஸ்டர் வேடத்தில் விஜய் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அடுத்தபடியாக அட்லீ இயக்கும் படத்தில் விஜய் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. எனினும் அண்மையில் தெலுங்கில் கிராக், வீரசிம்ஹா ரெட்டி உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கிய கோபிசந்த் மலினேனி, விஜய்யை சந்தித்து ஒரு கதை சொல்லி இருக்கிறாராம். அக்கதை விஜய்க்கு பிடித்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கோபி சந்தை பொறுத்தவரையிலும் ஹீரோக்களை மாஸாக காட்டக்கூடியவர் என்பதால் அவர் இயக்கத்தில் விஜய் அடுத்து நடிப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது எனவும் சொல்லப்படுகிறது.