ஜார்க்கண்ட் மாநிலம் டாட்டா நகரில் இருந்து எர்ணாகுளம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் சிக்னலுக்காக நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த ரயிலில் இருந்து வாலிபர் ஒருவர் கையில் பையுடன் கீழே இறங்கினார். இவரைப் பார்த்து சந்தேகம் அடைந்த காவல்துறையினர், அந்த வாலிபரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர் பையில் இருந்து 14 கிலோ கஞ்சாவை வைத்து கடத்தி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து காவல்துறையினர் வாலிபரை குறித்து கைது செய்ததோடு, அவரிடம் இருந்த கஞ்சா பையையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் சம்பந்தப்பட்ட வாலிபர் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியைச் சேர்ந்த பிரவீன்ராஜ்(34) என்பது தெரிய வந்தது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.