இந்திய விமான நிலையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. கடந்த அக்டோபர் 1ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் கூறிருந்ததாவது, மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும் என்று தெரிவித்தது. முன்னதாக சென்னையில் இருந்து விமானம் 8.45 க்கு புறப்பட்டு மதுரை வந்தடையும். அதன் பின் மீண்டும் மதுரையில் இருந்து 9 மணிக்கு புறப்பட்டு சென்னையை அடையும்.

ஆனால் தற்போது 24 மணி சேவை உள்ளது என்று அறிவித்த நிலையில், முதல் கட்டமாக இன்று மதுரையிலிருந்து 10.45 மணிக்கு கடைசி இண்டிகோ விமானம் சென்னை புறப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது முதல் விமானம் சென்னையில் இருந்து 9.25 மணிக்கு புறப்பட்டு, மதுரைக்கு 10 20 மணிக்கு வந்தடையும், பின்னர் மீண்டும் பயணிகளுடன் 10:45க்கு மதுரையிலிருந்து புறப்பட்டு, சென்னைக்கு 12. 5 மணிக்கு சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 24 மணிநேர சேவையின் முதல் கட்டமாக பார்க்கப்படுகிறது.