மகாராஷ்டிரா மாநிலத்தில் கோலாப்பூர் மாவட்டத்தில் திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த திருமணம் ஒரு காதல் திருமணமாகும். இந்த திருமணத்தில் கலந்து கொண்ட தாய் மாமனான மகேஷ் பாட்டில் தனது சகோதரியின் மகள் காதல் திருமணம் செய்து கொள்வதை விரும்பவில்லை. இதனால் திருமணத்திற்கு தடை விதித்துள்ளார். இருப்பினும் திருமணம் நடைபெற்றதால் ஆத்திரத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மகேஷ் பாட்டில் அங்கு சமைக்கப்பட்ட உணவில் விஷத்தை கலந்துள்ளார். மகேஷ் பாட்டில் உணவில் விஷம் கலப்பதை சிலர் பார்த்துள்ளனர்.

இதனை அடுத்து மகேஷ் பாட்டிலை அங்கிருந்த சிலர் பிடிக்க முயற்சித்துள்ளனர். இருந்தும் மகேஷ் பாட்டில் திருமண நிகழ்வில் இருந்து தப்பியோடி தலைமறைவாகியுள்ளார். விஷம் கலந்த உணவு யாருக்கும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் 3 பிரிவுகளின் கீழ் தாய்மாமான மகேஷ் பாட்டில் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர். சொந்த சகோதரியின் மகளின் திருமணத்தில் தாய்மாமன் விஷம் கலந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.