
சமூக ஊடகங்களில் மனதை உருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது ஓடும் ரயிலில், ஒரு முதியவர் தனது மனைவியின் நகங்களில் நெயில் பாலிஷ் பூசும் அழகான காட்சி அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அவரது செயல் பலரது இதயங்களையும் வென்றுள்ளது. “காதலுக்கு வயதில்லை” என்பதற்கு இது ஒரு நேரடி சான்றாக சமூக வலைதளங்களில் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
அந்த வீடியோவில், முதியவர் ஒருவர் தனது மனைவிக்கு சிவப்பு நிற நெயில் பாலிஷை எடுத்து மிகுந்த பொறுமையுடன் ஒவ்வொரு நகத்திலும் பூசுகிறார். அவருடைய மனைவி சிரித்துக் கொண்டே வழிகாட்டுகிறார். அந்த தருணம் அவர்கள் காதல் எவ்வளவு ஆழமானது என்பதை வெளிக்கொணர்கிறது. சாதாரணமாகவே இருந்தாலும், இந்த அன்பு செயல் கோடிக்கணக்கான மனங்களை தொட்டுள்ளது.
அந்த வீடியோக்கு சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. “தாதாஜி அனைத்து பெண்களின் இதயங்களையும் வென்றார்” என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். மற்றொருவர், “இது உண்மையான காதல், நம்பிக்கையை மீட்டுக் கொடுக்கும் தருணம்” என கூறியுள்ளார்.
பலரும், “இது போன்ற அன்பு இன்று காணவே முடியாது” என்றும், “இது காதலின் கடைசி தலைமுறை” என்றும் பதிவிட்டு வருகின்றனர். ரயிலில் நேர்ந்த இந்த எளிமையான சம்பவம் சமூக ஊடக உலகையே இன்பத்தில் மூழ்கடித்துள்ளது.