ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள காவேரிப்பாக்கம் தர்மலிங்க முதலில் தெருவில் லாரி டிரைவரான ரவிசங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது வீட்டிலிருந்து நேற்று முன்தினம் துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது மர்மமான முறையில் ரவிசங்கர் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரவிசங்கரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ரவிசங்கர் இறந்ததற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.