காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் – ஆம் ஆத்மி இடையே டெல்லி, ஹரியானா, சண்டிகர்,குஜராத், கோவா ஆகிய 5 மாநிலங்களில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டெல்லியில் காங்கிரஸ் 3, ஆம் ஆத்மி 4 இடங்களில் போட்டியிடுகிறது. குஜராத்தில் காங்கிரஸ் 24, ஆம் ஆத்மி 2 இடங்களில் போட்டியிடுகிறது.

ஹரியானா மாநிலத்தில் 9 தொகுதிகளில் காங்கிரசும், ஒரு தொகுதியில் ஆம் ஆத்மியும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சண்டிகரில் ஒரு தொகுதியிலும், கோவாவில் உள்ள 2 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி ஆதரவுடன் போட்டியிட உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.